December 17, 2010

புகைப்படம் - 18-12-2010

மாமல்லபுரம்





 திவ்யா
 தோட்டத்தில்.

December 07, 2010

புகைப்படம் - 08-12-2010

உங்கள் விமர்சனங்களைக் குத்துங்க எசமான் குத்துங்க...







நன்றி!
*

November 19, 2010

புகைப்படம் - 19-11-2010

வீட்டு மாடியில்.


*

November 13, 2010

புகைப்படம் - 14-11-2010

குழந்தைகள் தினமாம்!!!!
வருங்கால இந்தியாவுக்கு, பாதுகாப்பான எதிர்காலமும் முறையான கல்வியும் கிடைக்கட்டும்.












*

October 18, 2010

புகைப்படம் - 19-10-2010


எங்கள் வயலில் எடுத்தப் புகைப்படங்கள். 









*

October 14, 2010

காமன்வெல்த் விளையாட்டு 2010 - பூங்கொத்துகளும் ஒரு சவுக்கடியும்!

பத்தொன்பதாவது காமன்வெல்த் போட்டிகள் மிகக் கோலாகலமாக நடந்து முடிந்திருக்கின்றன. மிக மோசமான நிகழ்வுகளுடன் ஆரம்பித்த இந்த விளையாட்டுத் திருவிழா நல்லவிதமாக நடந்து முடிந்திருப்பது நிறைவைத் தருகிறது. விருந்தோம்பலுக்குப் பெயர் போன நாடு இந்தியா எனபதுடன், ஊழல், அலட்சியம் மலிந்த தேசம் என்பதையும் இன்னும் ஒரு முறை உலகுக்குச் சொல்லிப் பெருமைப் பட்டுக்கொண்டோம். பிற்பாடு மிகப் பிரம்மாண்டமாக ஆரம்பித்த போட்டிகள் முன்பு நடந்திருந்த நிகழ்வுகளை மறக்கடித்தன. தடைகளை மீறி சாதனை படைக்கும் நாடு இந்தியா என்ற குரல் உலக அரங்கில் ஓங்கி ஒலித்தது. வெற்றியின் பின்னாலிருக்கும் ஒவ்வொருவருக்கும் நன்றிகள். 

அடுத்தது விளையாட்டு வீரர்கள். 100 பதக்கங்கள் என்ற லட்சியத்துடன் களமிறங்கிய வீரர்கள் சொன்னதை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள். இறுதிப் போட்டியில் இந்திய ஹாக்கி அணியின் படு தோல்வி தனிப்பட்ட முறையில் வருத்தத்தைத் தந்தாலும், மொத்தப் பதக்கப் பட்டியலின் (38 தங்கம், 27 வெள்ளி மற்றும் 36 வெண்கலத்துடன் மொத்தம் 101 பதக்கங்கள்) முன்னால் பெரிதாகத் தெரியவில்லை. Again, விளையாட்டு வீரர்களுக்குத் தேவை ஒழுங்கான அங்கீகாரமும் நல்ல சூழலும். பதக்கம் வாங்கியவுடன் பாராட்டிவிட்டு மீண்டும் அடுத்தப் போட்டிக்கு வீரர்களைத் தேடுவது இனியாவது நடக்காமலிருக்கும் என நம்புவோம். வீரர்களுக்குப் பாராட்டுக்கள். மூன்றாவது இடத்திலிருந்த இந்தியாவை, தங்கம் ஒன்றை வென்று இரண்டாம் இடத்துக்கு ஏற்றி விட்ட சாய்னாவுக்கு கொஞ்சம் ஸ்பெஷலாக!!!!!! :) 

சவுக்கடி வேறு யாருக்குமில்லை. தமிழர்களாகிய நமக்குத் தான். இனவெறிக்கு எதிராக தீயாக வேலை செய்யும் இந்திய அரசு ராஜபக்சேவை மட்டும் கௌரவிப்பது என்னைப் பொறுத்தவரை மேலும் ஒரு சவுக்கடி!

*

October 10, 2010

கிராஸ் ப்ராஸஸிங்க் - ஃபோட்டோஷாப்.

ஃபோட்டோகிராஃபியில் கிராஸ் ப்ராஸஸிங் என்றொரு டெக்னிக் இருக்கிறது. ஒவ்வொரு ஃபிலிமுக்கும் ஒவ்வொரு கெமிக்கலை வைத்துப் ப்ராஸஸ் செய்வார்களாம். அவ்வாறில்லாமல் ஒரு ஃபிலிமுக்கு வேறு விதமான கெமிக்கலை பயன்படுத்திப் ப்ராஸஸ் செய்யும் போது வித்தியாசமான எஃபெக்ட் கிடைக்கிறது. 

தற்செயலாகக் கண்டறியப்பட்ட இந்த எஃபெக்ட் இன்று நிறைய தீம்களில் பயன்படுத்தப்படுகிறது. ஃபிலிம் ஃபோட்டோக்கள் சரி.. டிஜிட்டலில் எப்படி இந்த எஃபெக்டைப் பெறுவது? இருக்கவே இருக்கிறது வளைவுகள்.. அதாவது Curves!!!!!

1) படத்தை PS ல் திறவுங்கள்

2) Layer > New Adjustment Layer > Curves மூலம் ஒரு adjustment Layer ஐத் திறக்கவும்.

3) இனி சிவப்பு, பச்சை மற்றும் நீல நிறங்களின் Curves ஐ பின்வருமாறு மாற்றுங்கள். இப்போதே ஒரு மாதிரி வண்ணங்கள் மாறி இருக்கும்.


மூன்று வண்ணங்களையும் மாற்றிய பின் இவ்வாறு இருக்கும்.




4) இனி ரசனைக்கேற்றவாறு ஷார்ப்னெஸ், காண்ட்ராஸ்ட் மாற்றிக் கொள்ளவும்

5) கடைசியாக ஒரு மஞ்சள் நிற Fill Layer ஐத் திறக்கவும் Layer > New Fill Layer > Solid Color. நிறம் eaff00. இந்த லேயரின் ப்லெண்ட் மோடை Color க்கு மாற்றவும். Opacity ஐ பத்துக்கும் குறைவாக வைக்கவும்.

6) லேயர்களை ஒன்றாக்கி சேமித்துக் கொள்ளுங்கள். Tats it!


*

October 09, 2010

ச்சும்மா...


*

October 01, 2010

எந்திரன் மேனியா

முதலில் அமரர் சுஜாதா அவர்களைப் பற்றி... கதையின் அடிநாதம் அவரின் என் இனிய இயந்திராவை ஒட்டியே இருக்கிறது. 
”செயற்கை அறிவுடன் கூடிய இயந்திரன், மனிதன் போல் சிந்திக்க ஆரம்பித்தால்?” என்ற கேள்வியை வைத்து அவர் எழுதிய கதை என்று பிரம்மாண்டமாக, எந்திரனாக வளர்ந்திருக்கிறது. அஞ்சலிகள்!!! அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. 

இனி படம்... 

இந்திய ராணுவத்துக்கு அர்ப்பணிப்பதற்காக ஒரு மனித ரோபோவை (சிட்டி - ரஜினி)உருவாக்குகிறார் டாக்டர் வசீகரன் (ரஜினி). அந்த ரோபோவுக்கு மனித உணர்வுகள் கற்பிக்கப்படுகின்றன. பிறகு சிட்டி, டாக்டரின் காதலி சனா (ஐஸ்) மீது காதல் கொள்கிறது. இடையில் வில்லன்(டேனி), சிட்டியை தீய நோக்கத்துக்குப் பயன்படுத்த நினைக்கிறார். அதன் பிறகு நடக்கும் விறு விறு சுறு சுறு ரேஸ் தான் எந்திரன்.

ரஜினியைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். தனது மாஸைப் பற்றிக் கவலைப்படாமல், வழக்கமான எண்ட்ரி இல்லாமல், குத்து வசனங்கள் இல்லாமல் நடித்திருக்கிறார். மற்ற So called super stars கவனிக்க வேண்டிய விஷயம் இது. மிரட்டல் தலைவா!!!!

ஐஸுக்கு வயசானது ராவணனிலேயே கன்ஃபார்ம் ஆகிவிட்டது. ஆனால் இந்தப் படத்தில் ரஜினியுடன் இருக்கும் போதெல்லாம் இளமையாகத் தெரிகிறார். டான்ஸ் அசத்தல். 

இயக்குனர் ஷங்கர் ஒரு அறிவியல் கதையை முடிந்த அளவுக்கு கமர்சியலாக்கித் தந்திருக்கிறார். வெற்றியும் பெறுகிறார். எங்கேயும் யோசிக்கவிடாத திரைக்கதை கடும் உழைப்பைக் காட்டுகிறது. கடைசி 45 நிமிடங்கள் பிரம்மிக்க வைக்கின்றன. அவரிடமிருந்து இந்த மாதிரியான பிரம்மாண்டங்களைத் தான் எதிர்பார்க்கிறோம். ரோட்டுக்குப் பெயிண்ட் அடித்து ரண்டக்க ரண்டக்க என்று பாடுவதையல்ல... :) 

சில இடங்களைத் தவிர்த்து கிராஃபிக்ஸ் நேர்த்தியாக இருக்கிறது. கலை, இசை, சண்டைப் பயிற்சி எல்லாம் செம செம... இரண்டாம் பாதியில் வரும் சில ரொமான்ஸ் காட்சிகளை மட்டும் வெட்டியெறிந்திருக்கலாம். பாடல்கள் பார்க்க நன்றாக இருந்தாலும் வேகத்தைக் குறைக்கின்றன. 

மொத்தத்தில் இந்திய நிறத்தில் ஒரு ஹாலிவுட் சினிமா... 

டிஸ்கி 1 : இந்தி மீடியாக்கள் படத்தைக் கொண்டாடுகின்றன. எப்பேர்ப்பட்ட படத்துக்கும் மூன்று ஸ்டார்கள் கூட கொடுக்க அழும் விமர்சகர்கள், எந்திரனுக்கு நான்கு நான்கரை என்று தந்திருக்கிறார்கள்.

டிஸ்கி 2 : இந்த மாதிரி முயற்சிகள் வெற்றி பெறாவிட்டால், கிராமத்திலிருந்து நகரத்துக்கு வந்து ரௌடிகளை அழிக்கும் சூப்பர் ஹீரோக்களை மட்டுமே பார்க்க வேண்டியிருக்கும் என்பது எனது கருத்து. :)

டிஸ்கி 3 : ஷாருக் படத்தைப் பார்த்துக் கண்டிப்பாக வருந்தியிருப்பார். 

*

September 29, 2010

முகங்கள்

”மச்சி, போர்ட்ராய்ட் உனக்கு நல்லா வருது” என்றான் நண்பன்.. மற்ற படங்கள் எல்லாம் சகிக்கவில்லை போல.... 


அதனால் இந்த பதிவில் நான் எடுத்ததில் எனக்குப் பிடித்த முகங்கள்... 


1) திவ்யாக்குட்டி.. 

2) திவ்யா அம்மாவுடன்.

3) நண்பன் விமல்


4) சித்தார்த் (எ) வசந்த்.


5) மாடல்(!) வெங்கி...


6) கடைசியாக எனக்குப் பிடித்த கருப்பு வெள்ளையில், மாமல்லபுரத்திலிருந்து ஒரு ஆயா...


வழக்கம்போல் உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

September 06, 2010

Maze மற்றும் உங்களுக்கு ஒரு புதிர்



முதன் முதலில் Maze எனக்கு அறிமுகமானது ஏதோ ஒரு வார இதழ் மூலம்.  கேரட்டை அடைய முயலுக்கு வழிகாட்டுங்கள் அல்லது திருடனைப் பிடிக்கக் காவலருக்கு உதவுங்கள் என்ற ரீதியில் தான் இருக்கும் அவை. எனக்கும் இந்த அளவிலான அறிமுகம் தான் இருந்தது ஒரு நாவலைப் படிக்கும் வரை. 


புத்தகங்களில் இருக்கும் புதிர்களில், மொத்தப் புதிரின் ஏரியல் வியூ இருக்கும். எத்தனை முறை வேண்டுமானாலும் தவறு செய்யலாம். திருத்தலாம். மாறாக, பத்தடி உயரம் கொண்ட சுவர்களால் சூழப்பட்ட, குறுகலானஒரு பாதையைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். கொஞ்ச தூரம் பயணம் செய்தவுடன் ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகள் நேர்ப்படும். சரியான வழியைத் தேர்வு செய்ய வேண்டும். கொஞ்ச தூரத்தில் மேலும் சில சாய்ஸ்கள். சாதாரண மேஸ் கான்செப்ட் தான். ஆனால் இரண்டு அல்லது மூன்று முறைத் திரும்பிவிட்டால் திசையும் பாதையும் மறந்துவிடும். பத்தடிச் சுவர் என்பதால் இலக்கும் கண்ணுக்குத் தெரியப் போவதில்லை. சரியான வழியைப் பிடிக்கும் வரை உள்ளேயே சுற்றிக் கொண்டிருக்க வேண்டியது தான். இவற்றை லைஃப் சைஸ் மேஸ் என்பார்கள்.  அந்த நாவலில் இது மாதிரி ஒரு மேஸ் தான் வரும். ஆபத்தான நீத்தா காட்டுவாசிகளிடம் அகப்படும் இருவர் ஒரு மேஸுக்குள் அனுப்பப் படுகிறார்கள். திக்குத் தெரியாத அந்தப் புதிருக்குள் கொலைப் பசியுடன் காத்திருக்கும் கழுதைப் புலிகள் வேறு. சரியானப் பாதையைத் தேர்ந்தெடுத்து, கழுதைப் புலிகளிடமிருந்துத் தப்பித்து, குறித்த நேரத்துக்குள் மறுமுனைக்கு வந்து சேர வேண்டும். 



இந்தப் புதிர்கள் பற்றி இன்னும் தெரிந்து கொள்ளத் தோன்றியது. சிக்கலான மேஸ்களை உருவாக்கியவர்கள் யாரென்று சொல்லித் தான் தெரிய வேண்டுமென்பது இல்லை. வழக்கம் போல எகிப்து! மேஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டது பொழுது போக்கிற்காகத் தான் என்றாலும், பிற்பாடு மத நம்பிக்கைகளுக்காகப் பெரிதும் பயன்படுத்தப்பட்டது. இங்கு labyrinth என்றொரு கான்செப்ட் வருகிறது. மேஸ் போலில்லாமல், labyrinth களில் தெளிவான ஒரே வழி தான். கிளை வழிகள் இல்லை. இலக்கை நோக்கிப் போய்க்கொண்டே இருக்கலாம். ஒவ்வொரு திருப்பத்துக்கும் உடல் 180 டிகிரி திரும்புவதால் தற்காலிகமாக வெளி உலகை மறக்கிறீர்கள். அதனால் மன அழுத்தமும் குறைகிறது. தவிர இதிலிருக்கும் ஒரே ஒரு வழி பிறப்பைக் குறிக்கிறது. மையப் பொருள் கடவுள். சிக்கலான பாதை கடவுளை அடைவதற்கு எதிர்கொள்ள வேண்டிய கஷ்டங்களைக் குறிக்க்கிறதாம். இந்து மதத்தில் வரும் எந்திரங்களும் labyrinth தான் என்கிறார்கள். ஆனால் முதன் முதலில் உருவாக்கப்பட்ட labyrinth பலிபீடமாகப் பயன்படுத்தப்பட்டதாம்(Cretan labyrinth at Knossos). 


இந்தியாவிலும் இந்த மேஸ்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. மகாபாரதப் போரின் சக்ரவியூகம் நினைவிருக்கிறதா? நீலகிரியிலும் வட இந்தியாவில் சில குகைகளிம், கோவாவிலும் labyrinth ஓவியங்களைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். 

அதன் பிறகு மேஸ்கள் பெருமளவு பயன்படுத்தப்பட்டது பாதுகாப்புக்காக. விலைமதிப்பற்ற ஒரு பரிசு ஒரு தகுதியானவருக்குத் தான் கிடைக்க வேண்டும். இது தான் சாராம்சம். மேற்சொன்னவாறு தண்டனைக்காக எல்லாம் மேஸ்களை உபயோகப்படுத்தினார்களா என்று தெரியவில்லை..:) 
இன்று இந்த மேஸ்கள் சைக்காலஜி, ஆர்க்கிடெக்சர் போன்ற துறைகளில் பங்கு வகிக்கின்றன. 

மேஸ்களின் பரிமாணங்கள், பாதைகளின் வடிவம், கிளைகள், மொத்தப் புதிரின் வ்டிவம் என்று நிறைய மாதிரி மேஸ்களை வகைப் படுத்துகிறார்கள். ரொம்பக் கஷ்டப்படுத்திக் கொள்ள வேண்டாம். கீழிருக்கும் புதிரை மட்டும் கண்டுபிடியுங்கள்! 



*

September 03, 2010

ஃபோட்டோஷாப் - கலர் கரெக்‌ஷன்.

சில புகைப்படங்கள் ஆர்ப்பாட்டமான வண்ணங்களில் அழகு. சில கருப்பு வெள்ளையில்... மூன்றாவதாக, ப்ரைட் கலர்களும் இல்லாமல் முழுக்க கருப்பு வெள்ளையாகவும் இல்லாமல் வெளிறிப் போனது போல ஒரு எஃபெக்டில் இருக்கும் படங்களுக்கும் தனி அழகு இருக்கத்தான் செய்கிறது. தனிமையான கட்டிடங்கள் ம்ற்றும் எல்லாவிதமான போர்ட்ராய்ட்களுக்கு ஏற்றது இந்த எஃபெக்ட். இந்த எஃபெக்ட் கொண்டுவர வழக்கம் போல நிறைய முறைகள் இருக்கின்றன. Saturation ஐக் குறைக்கலாம். இன்னும் Gradiant Map இருக்கிறது.

ஆனால் நாம் செய்யப் போகும் இந்த முறையில் ஒரு நல்ல விஷயம் இருக்கிறது. படத்தின் Contrast அப்படியே மெய்ண்டெய்ன் செய்யப்படுகிறது.

இனி வழிமுறை:

1) படத்தை PS ல் திறவுங்கள்.

2) Channels pallet இல் RGB லேயர் மீது Ctrl+Click செய்யவும். படத்தின் Bright Pixel எல்லாம் தேர்வு செய்யப்பட்டிருக்கும்.

3) இப்பொழுது Select > Inverse மூலம் Dark Pixel களைத் தெரிவு செய்து கொள்ளுங்கள்.

4) கருப்பு நிற Solid Color லேயரைச் சேர்க்கவும். Layer > New Fill Layer > Solid Color. Blending mode ஐ Multiply க்கு மாற்றிக்கொள்ளுங்கள்.

5) செலெக்ஷன் காணாமல் போயிருக்கும். Select > Re-select மூலம் திரும்பவும் தேர்வு செய்துகொள்ளலாம். இப்பொழுது Select > Inverse மூலம் Bright Pixel களைத் தெரிவு செய்து கொள்ளுங்கள்.

6) இந்த முறை வெள்ளை நிற Solid Color லேயரைச் சேர்க்கவும். Blending mode ஐ Screen க்கு மாற்றிக்கொள்ளுங்கள்.

7) Layer > Flatten Image மூலம் எல்லா லேயர்களையும் ஒன்றாக்கிக் கொண்டு படத்தைச் சேமித்துக் கொள்ளுங்கள்.

ஒரு உதாரணம்!

Before
After

August 24, 2010

புகைப்படம் - 25-08-2010

தமிழ்நாடு தான். எந்த ஊர் என்று தெரிகிறதல்லவா? கடைசி படத்தில் க்ளூவும் இருக்கிறது.















நன்றி ஹை.

August 23, 2010

எம்.பிக்கள் சம்பளம் - ஒரு அனல் மூச்சு.



ஒரு வழியாக குட்டிக்கரணம் அடித்து 500 சதவீத சம்பள உயர்வை வாங்கியே விட்டனர் எம்.பிக்கள். இப்போது மாதச் சம்பளம் 1.6 லட்சம். சம்பள உயர்வு வேண்டும் என கோஷம் எழுப்பி, அவையை முடக்கி வாங்கிய உயர்வு இது. 

இன்று லஞ்ச்சில் இதைப்பற்றி தான் பேச்சு. அந்த 500 சதவீத உயர்வு எல்லோரிடமும் ஒரு அனல் மூச்சைக் கிளப்பிவிட்டிருந்தது. :) 

சாதாரண கம்ப்யூட்டர் ப்ரோக்ராமர் வேலையில், 6%, 8% உயர்வு வாங்கவே நிர்ணயிக்கப்பட்ட Goals எல்லாம் முடித்திருக்க வேண்டும், சர்டிஃபிகேஷன் ஏதாவது எழுதியிருக்க வேண்டும், Value-Add ஏதாவது காட்ட வேண்டும், இப்படி ஏகப்பட்ட ஏகப்பட்ட மதிப்பீட்டு முறைகள் இருக்கின்றன. ஒவ்வொரு துறையிலும் அதற்குத் தகுந்தவாறு வழிமுறைகள் கட்டாயம் இருக்கும். ஒரு தொகுதியின் பிரதிநிதி என்பவர் ஒரு பெரிய நிறுவனத்தின் ஒரு துறையின் தலைவர் போலக் கொள்ளலாமா? கொண்டால் அந்தப் பதவிக்கு ஏன் மதிப்பீட்டு முறையில் சம்பள உயர்வை நிர்ணயிக்கக் கூடாது? எத்தனையோ எம்.பி க்கள் தொகுதிக்கும் போகாமல் நாடாளுமன்றத்துக்கும் போகாமல் இருப்பது கண்கூடு. அதைவிட குற்றப் பின்புலம் கொண்ட எம்.பிக்கள் எவ்வள்வு பேர்?  அப்படிப்பட்டவர்களுக்கு எல்லாம் எதற்கு சம்பள உயர்வு? 

என்னைக்கேட்டால் அரசியல்வாதிகளுக்கும் ரேட்டிங்க்-சிஸ்டம் ஏதாவது கொண்டு வரலாம். பதவியேற்பின் போது மூன்று ஸ்டார்கள் வழங்கப்படலாம். ஒவ்வொரு தவறுக்கும் ஒன்று பறிக்கப்பட வேண்டும். மூன்று ஸ்டாரும் அவுட் என்றால் பதவி கோவிந்தா... அடுத்து அவர் தேர்தலில் போட்டியிடவே கூடாது. அவர் செய்யும் ஒவ்வொரு நல்ல விஷயத்துக்கும் ஒரு ஸ்டார் மற்றும் அதற்குத் தகுந்த மாதிரி சம்பள உயர்வு தரப்படலாம். தொகுதி வளர்ச்சி நிதியை அவர் செலவழிக்கும் விதம், நாடாளுமன்றத்துக்கு அட்டென்டன்ஸ், கிரிமினல் ரெக்கார்ட்ஸ் இது மாதிரி விஷயங்களை வைத்து அவரை மதிப்பிடலாம். இதைச் சொன்னதுக்கு நண்பன் சொன்னான் "போயா, டொய்யாலே!"

சரிதான். இந்த மாதிரி ஒரு சிஸ்டம் வருவதற்கு ஒருவரும் அனுமதிக்கப் போவதில்லை. அப்படி வந்தால் ஒருவரும் தொழில் சாரி, அரசியல் பண்ன முடியாது. எல்லாம் ஒரு நப்பாசை தான். மன்னிச்சிடுங்க பாஸ்.

இன்னொருத்தர் சொன்னார். "இதற்கு மேலாச்சும் காசுக்கு ஆசைப்படாம ஒழுங்கா வேலையச் செய்வாங்களா பார்க்கலாம்". 
"ஆமாம், என்னவோ சோத்துக்கு வழியில்லாமல் தான் கொள்ளையடிக்குற மாதிரி சொல்றீங்க?" என்று சொல்லலாம் என்று தோன்றியது.

எல்லாம் ஒரு தொடர் சங்கிலி மாதிரி ஆகிவிட்டது. பணம் சம்பாதிக்க வேண்டும், அதற்குப் பதவி வேண்டும், அதற்கு காசு செலவழிக்க வேண்டும், பதவிக்கு வந்த பின் விட்ட காசைப் பிடிக்க வேண்டும், அடுத்தது மிக முக்கியம், சேர்த்த காசைப் பாதுகாக்க மீண்டும் பதவிக்கு வர வேண்டும். அதற்கு என்ன செய்வது? காசை செலவழித்து பதவியைப் பிடி! 

சரி நீங்க என்ன நினைக்கிறீர்கள் ? எம்.பி களுக்கு இந்தச் சம்பளம் நியாயமானதா? இல்லை அதிகமா? அல்லது எவ்வளவு கொடுத்தாலும் போதாது என்று நினைக்கிறீர்க்ளா ? பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். உங்களுக்காக PVR Cinemas Couple Pass காத்துக் கொண்டு இருக்கிறது. ச்சே... வரவர ஓவரா எஃப்.எம் கேட்கிறேன். 

August 18, 2010

அரட்டை - 19-08-2010

நண்பர்களுடனான எனது சனிக்கிழமைகள் விசேஷமானவை. மறுநாள் காலை நான்கு மணி வரை நீளும் இரவுகளை, பேசியேத் தீர்ப்போம். அரிதாக உருப்படியான விஷயங்கள் விவாதிக்கப்படுவதுண்டு. சமீபத்தில் விவாதிக்கப்பட்ட விஷயம் G.D.P (Gross Domestic Product). மொத்த உள்நாட்டு உற்பத்தி. இந்தியாவின் ஜி.டி.பி விகிதம் சரியான முறையில் கணக்கிடப்படுவதில்லை என்று பேசிக்கொண்டிருந்தார்கள். எனக்கு ஜி.டி.பி பற்றி ஒரு இழவும் தெரியாத்ததால் புரிந்தும் புரியாமலும் கேட்டுக்கொண்டிருந்தேன். அன்று மழை பெய்து ஓய்ந்திருந்தது. சிட்டி சென்டரிலிருந்து அறைக்கு வந்து கொண்டிருந்தோம். ஜி.டி.பி யில் ஆரம்பித்த விவாதம் பிளாட்ஃபார்ம் வாசிகள் பக்கம் திரும்பி, அரசின் மெத்தனத்தைச் சாடி, இறுதியாக "அரசாங்கம் இருக்கட்டும், நீ சமூகத்திற்கு என்ன செய்யப் போற?" என்ற கேள்வியில் வந்து நின்றது. 

"இனி இந்தியப் பொருட்களைத் தான் வாங்குவேன்" என்றான் ஒரு நண்பன்.  

"முடிந்த வரை நகரத்தைச் சுத்தமாக வைத்திருப்பேன்" என்றான் இன்னொருவன், புகைத்து முடித்திருந்த சிகரெட்டைத் தெருவில் விட்டெறிந்துவிட்டு!

"நண்பர்களுக்குட் ட்ரீட் கொடுப்பதை விட ஒரு சாரிட்டிக்கு டொனேஷன் கொடுக்கலாம்" என்றேன் நான். 

ஒரு வாரம் ஆகிவிட்டது. சுதேசி நண்பன் லேட்டஸ்ட் நோக்கியா மொபைல் வாங்கியிருக்கிறான். அதற்காக McD யில் ட்ரீட் கேட்டு நச்சரித்துக் கொண்டிருக்கிறேன் நான்.

கஷ்டம்! 

{}

முன்னாள் தோழிக்குத் திருமணம் நிச்சயமாகிவிட்டது. இந்த மாதிரி தருணங்களில் கவிதை எழுதும் வழக்கம் இன்னும் இருக்கிறதா? யாராவது யாப்பிலக்கணம் சொல்லித் தர முடியுமா? 

{}


புதிய தோழி இரண்டு ஜோடி Budgerigar வளர்க்கிறாள். இது ஏதோ Breeding சீசனாம் :). அவைகளுக்குக் கூடு கட்டக் கூடத் தெரியவில்லையாம். அதற்கு என்னிடம் சண்டை பிடிக்கிறாள். என்ன கொடுமை சார் இது ?

{}


உங்களுக்கு Super-Ancient கலாச்சாரங்களைப் பற்றியக் கதைகள் பிடிக்குமா? சிம்பல்ஸ்? பிரமிடின் மர்மங்கள் ? Treasure Hunt கலந்த விறுவிறுப்பான ஆக் ஷன் கதைகள் ? பிடிக்க்குமென்றால் உங்களுக்கு மேத்யூ ரெய்லியின் இந்த நாவல்களை ரொம்பப் பிடிக்கும்.

1) Seven Ancient Wonders
2) Six Sacred Stones
3) Five Great Warriors. 

இதே வரிசையில் படிக்கவும். பட்டாசு பட்டாசு! 

{}

August 17, 2010

நான் மகான் அல்ல!

1. வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

மகேஷ் : ரசிகன்.

2. அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன? 
  
மகேஷ் என் பெயர். ரசிகன் நான் படித்து வாங்கிய பட்டம்.  :) 

3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி..

அது ஒரு சோக தருணம். (உங்களுக்குத் தான்)

4. உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்? 

எப்பயாச்சும் எழுதுவதே கஷ்டமாயிருக்கிறது. இதில் பிரபலம் வேறா? நெக்ஸ்ட்... 

5. வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

அவ்வப்போது. பகிர்ந்துகொள்ளும் போது சந்தோஷம் இரட்டிப்பாகுமாம். ஆகிறதா என்று பார்க்க!

6. நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

நண்பர்களைச் சம்பாதிக்க. 

7. நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன? 

ஒன்றே ஒன்று தான்.

8. மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

பொறாமை :  கார்க்கி (தோழி அப்டேட்ஸ் சான்ஸே இல்ல), வானவில் வீதி கார்த்திக் (இளமை எக்ஸ்பிரஸ்னா தலைவர் தான்)  பிரசன்னா (உயிரோட தான் இருக்கானானு தெர்ல),

கோபம் : எழுத்துச் சுதந்திரத்தைத் தனி மனிதத் தாக்குதல்களுக்கு பயன்படுத்தும் எல்லோர் மீதும். 

 9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

தமிழ்ப்பறவை - பரணி - டியர் அண்ணா.. :) 

10. கடைசியாக, விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்..

மரண வாக்குமூலமா வாங்குறீங்க? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..... 

டிஸ்கி : தலைப்பு மேட்ச் ஆகவில்லை? 

*

August 10, 2010

லைட் ரூம்

(ஜில்லு, தலைப்பைப் பார்த்துட்டு தப்பா நினைக்கக் கூடாது.)

ஃபிலிம் நெகட்டிவ்களை ப்ராசஸ் (சரியாகச் சொன்னால் டெவலப்) செய்யும் இடம் டார்க்ரூம் என்று தெரியும். அதன் அடிப்படையில், டிஜிட்டல் படங்களைப் ப்ராசஸ் செய்ய லைட்ரூம் என்றொரு மென்பொருள் இருக்கிறது. இப்பொழுது தான் உபயோகிக்க ஆரம்பித்திருக்கிறேன். Exposure, Clarity, brightness, Contrast என ஏறக்குறைய அனைத்து பண்புகளையும் சுலபமாக மாற்றிக்கொள்ள் முடிகிறது. இதன் முக்கிய அம்சமே Clarity தான். வழக்கமாக படத்திலுள்ள ஒளி இரைச்சலை (Noise) நீக்க முயன்றால், “ஙே” என்றிருக்கும். ஆனால் இங்கு படத்தின் தரத்துக்கு எந்தப் பங்கமுமின்றி Clarity ஐ அதிகப்படுத்த முடிகிறது. இன்னொரு முக்கிய அம்சம் Presets. ஃபோட்டோஷாப்பில் முக்கி முனகி ப்ளாக் & வைட் மாற்றுவதற்குள் என் சிஸ்டத்தில் அரை மணி ஆகும். இங்கு ஒரே க்ளிக்கில் பல்வேறு வகையான எஃபெக்ட்களைத் தெரிவு செய்ய முடியும். 

நன்றாக இருக்கிறது. 

லைட்ரூமில் மாற்றிய ஒரு புகைப்படம்.



ஏற்காட்டில் ஒரு கடைக்கார ஆயா. நிறைய அவர்களை நேரம் போரடித்துவிட்டேன்.

August 05, 2010

எந்திரன் - முன்னோட்டம்.

சுஜாதாவின் "என் இனிய இயந்திரா" படித்திருக்கிறீர்களா? அழகான அறிவியல் கதை. நிலா என்ற அழகியும் ஜீனோ என்ற இயந்திர நாயும் சேர்ந்து கொண்டு செய்யும் சாகசங்கள் தான் கதை. ஜீனோ அநியாயத்துக்குப் புத்திசாலி. புத்தகம் படிக்கும், கவிதை நெய்யும், லாஜிக்கல் ரீசனிங்கில் வித்தை காட்டும். எல்லாவற்றிற்கும் மேலாக உணர்வுகள் என்ற உன்னதத்தைப் பெற்று படைப்பின் உச்சத்தை அடையும். தானாகவே சிந்திப்பது, நிலாவின் மேல் மையல் கொள்வது, தடவிக்கொடுத்தலில் இருக்கும் அன்பை உணர்வது, பயம் கொள்வது என்று அட்டகாசம் செய்யும்.

இயந்திரன் என்ற பெய்ரைக் கேட்டவுடன் அப்படிப்பட்ட செயற்கை அறிவுடன் கூடிய இயந்திரம் செய்யும் சாகசங்கள் தான் படம் என்று தெரிந்தது. பாடல்களும் ட்ரெய்லரும் அதை உறுதிப்படுத்துகின்றன. பார்க்கலாம் அறிவியலும் மசாலாவும் ஒன்று சேரப் போகின்றன. 160 கோடி பட்ஜெட் என்கிறார்கள். சன் பிக்சர்ஸ் செய்யலாம். ரஜினியின் முகத்தை விதவிதமான லைட்டிங்கில், விதவிதமானக கோணங்களில் என்பது விதமான படங்கள் எடுத்து கிராஃபிக்ஸ் செய்து இருக்கிறார்களாம். சண்டைக் காட்சிகளே மொத்தம் ஒரு மணி நேரம் வருகின்றதாம். ஊரெல்லாம் எந்திரன் தான்.

ஒன்று மட்டும் புரியவில்லை. ஆறு பாட்டுகளில் ஐந்து ரோபோவிற்குத்தான் போலிருக்கிறது. "அஃறிணையின் அரசன் நான், காமுற்றக் கணினி நான்" என்றெல்லாம் ரோபோ பாடுகின்றது. நம்மவர்கள் ஏலியனை வைத்துப் படம் எடுத்தாலும் அதற்கும் ஒரு பில்ட்-அப் சாங் வைப்பார்கள்.

ஆனால், சும்மாச் சொல்லக் கூடாது. முதல் முறை கேட்டபோது கன்னாபின்னாவென இருந்தப் பாடல்கள், புரிய ஆரம்பித்ததும் ஆட்டம் போட வைக்கின்றன. Rahman Rocks! "இரும்பிலே ஒரு இருதயம் முளைத்ததோ" கதறக் கதறக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

தமிழில் அறிவியல் படங்கள் வருவது வரவேற்கத்தக்கது. என்ன ஒன்று, டெரா ஹெர்ட்ஸும், ஜெரா பைட்ஸும் புரிந்து தொலைக்க வேண்டும்.

எந்திரன் டீமுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

*

July 25, 2010

அசின், இலங்கை, நடிகர் சங்கம்,மீனவர்கள்....


அசின் சர்வதேசத் திரைப்பட விழாவுக்காக இலங்கை சென்று வந்தாலும் வந்தார், அந்த விஷயத்தை வைத்து ஏகப்பட்ட பேர் தமிழ்ப்பற்றை வெளிக்காட்டிக்கொண்டிருந்தார்கள். அசினை தமிழ் சினிமாவை விட்டே ஒதுக்கி வைக்க வேண்டும், தடை செய்ய வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருந்தார்கள். மீனவ நண்பர்கள் கூட விவேக் ஓப்ராய் மற்றும் அசினுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருக்கிறார்கள். இந்நிலையில் இன்று கூடிய நடிகர் சங்கத்தில் இலங்கை செல்ல நடிகர் நடிகைகளுக்குத் தடை விதிக்கக் கூடாது என்று முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகப் படிக்கக் கிடைத்தது.

Do I miss something?

என்னவாயிற்று தமிழுணர்வு? அடப்போங்கப்பா.... நாமும் நம் தமிழுணர்வும். கேட்க வேண்டியவர்களைக் கேட்க முடியவில்லை, அசினுக்கும் விவேக் ஓப்ராய்க்கும் தடை விதிக்கிறார்களாம். சாவிலும் அரசியல் ஆதாயம் தேடும் நம்மவர்கள் போக்கு, அருவருப்பாயிருக்கிறது.

What say you ?

July 19, 2010

பார்டர் கட்டலாம் வாங்க - ஃபோட்டோஷாப்

பார்டர் என்றாலே பிரச்சனை தான். ஆனால் புகைப்படங்களைப் பொறுத்தவரை பார்டர் ஒரு படத்தை எடுப்பாக்கிக் காட்டும். உதாரணத்துக்கு ஒரு ஆறு அல்லது கடலின் புகைப்படம்.... பார்டர் இல்லாமல் தண்ணீர் படத்தைவிட்டு வழிந்தோடும் உணர்வைத் தரும். (என்னது அப்படியெல்லாம் இல்லையா? எனக்கு அப்படித் தான் தோன்றித் தொலைகிறது). போகட்டும்! பார்டருடன் கூடிய புகைப்படம் தனி அழகு தான்.
ஃபோட்டோஷாப்பில் மிக எளிய டெக்னிக் மூலம் இந்த பார்டரைக் கொண்டு வரலாம்.

1) தேவையான படத்தை PS இல் திறக்கவும். படத்தின் சைஸ் தெரிந்திருக்க வேண்டும்.

2) கேன்வாஸ் சைசை தெரிவு செய்து கொள்ளுங்கள். Image > Canvas Size

3) கீழ்கண்ட உரையாடல் பெட்டி திறக்கும். பார்டரின் நீள அகலங்களை Width மற்றும் Height ல் நிரப்பவும். Anchor இல் எல்லா அம்புகளும் வெளிநோக்கி இருக்கட்டும். பார்டர் கலரை Canvas Extension Color இல் தெரிவு செய்து கொள்ளலாம்

4) எல்லாவற்றையும் தெரிவு செய்து ஓ.கே கிளிக்கினால் அழகான பார்டர் ரெடி.

கீழிருக்கும் படத்தைப் பாருங்கள்!


சில படங்களுக்கு இரண்டு பார்டர்கள் கொடுத்தால் அழகாக இருக்கும்.


ஃபோட்டோவுக்கு காண்ட்ராஸ்ட்டாக மெல்லிய பார்டர் ஒன்று. அதற்கு மேல் ஃபோட்டோவின் கலரை ஒட்டி திக்கான பார்டர் ஒன்று... முதலில் வெள்ளை.. அடுத்து கரும்பச்சைக்கு அதே வழிமுறை.

சில ஃபோட்டோக்களில் நான்கு பார்டர் வரை பார்த்து இருக்கிறேன். படத்தை விட பார்டர் பெரிதாக இருக்கும்.. :)

நன்றி!

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More