பத்தொன்பதாவது காமன்வெல்த் போட்டிகள் மிகக் கோலாகலமாக நடந்து முடிந்திருக்கின்றன. மிக மோசமான நிகழ்வுகளுடன் ஆரம்பித்த இந்த விளையாட்டுத் திருவிழா நல்லவிதமாக நடந்து முடிந்திருப்பது நிறைவைத் தருகிறது. விருந்தோம்பலுக்குப் பெயர் போன நாடு இந்தியா எனபதுடன், ஊழல், அலட்சியம் மலிந்த தேசம் என்பதையும் இன்னும் ஒரு முறை உலகுக்குச் சொல்லிப் பெருமைப் பட்டுக்கொண்டோம். பிற்பாடு மிகப் பிரம்மாண்டமாக ஆரம்பித்த போட்டிகள் முன்பு நடந்திருந்த நிகழ்வுகளை மறக்கடித்தன. தடைகளை மீறி சாதனை படைக்கும் நாடு இந்தியா என்ற குரல் உலக அரங்கில் ஓங்கி ஒலித்தது. வெற்றியின் பின்னாலிருக்கும் ஒவ்வொருவருக்கும் நன்றிகள்.
அடுத்தது விளையாட்டு வீரர்கள். 100 பதக்கங்கள் என்ற லட்சியத்துடன் களமிறங்கிய வீரர்கள் சொன்னதை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள். இறுதிப் போட்டியில் இந்திய ஹாக்கி அணியின் படு தோல்வி தனிப்பட்ட முறையில் வருத்தத்தைத் தந்தாலும், மொத்தப் பதக்கப் பட்டியலின் (38 தங்கம், 27 வெள்ளி மற்றும் 36 வெண்கலத்துடன் மொத்தம் 101 பதக்கங்கள்) முன்னால் பெரிதாகத் தெரியவில்லை. Again, விளையாட்டு வீரர்களுக்குத் தேவை ஒழுங்கான அங்கீகாரமும் நல்ல சூழலும். பதக்கம் வாங்கியவுடன் பாராட்டிவிட்டு மீண்டும் அடுத்தப் போட்டிக்கு வீரர்களைத் தேடுவது இனியாவது நடக்காமலிருக்கும் என நம்புவோம். வீரர்களுக்குப் பாராட்டுக்கள். மூன்றாவது இடத்திலிருந்த இந்தியாவை, தங்கம் ஒன்றை வென்று இரண்டாம் இடத்துக்கு ஏற்றி விட்ட சாய்னாவுக்கு கொஞ்சம் ஸ்பெஷலாக!!!!!! :)
சவுக்கடி வேறு யாருக்குமில்லை. தமிழர்களாகிய நமக்குத் தான். இனவெறிக்கு எதிராக தீயாக வேலை செய்யும் இந்திய அரசு ராஜபக்சேவை மட்டும் கௌரவிப்பது என்னைப் பொறுத்தவரை மேலும் ஒரு சவுக்கடி!
*
5 கருத்து:
மானம் காக்கப்பட்டது...
Huge sigh of relief. High time we clean up sports administration in india.
Miga nalla padhivu :)
நல்ல பதிவு தல
games over, corruption case begins ;)
Post a Comment