June 01, 2009

ஜன கண மன...

மல்லியம்மன் துர்க்கம்... ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திலுருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் அமைந்துள்ள மலைக் கிராமம். அந்த கிராமத்தை அடைய ஒரு 8. கி.மீ மலையேற வேண்டியிருக்கும். மின்சாரம், சாலை வசதி எதுவும் இல்லாத ஒரு கிராமம்.  மாதம் ஒரு முறை மட்டுமே நடக்கும் ஆரம்பப் பள்ளி வன அலுவலர்களுக்கும், காவலர்களுக்கும் விருந்தினர் இல்லம்.

இருளில் மூழ்கிப் போயிருந்த அந்த கிராமத்தில், இன்று சூரிய சக்தியில் இயங்கும் தெரு விளக்குகள் அமைக்கப்ப்ட்டுள்ளன. பள்ளிக்கூடம் தொடர்ந்து நடக்க ஆவன செய்ய ஆலோசிக்கப்பட்டு வருகிறது. பின்கண்ட செய்தியுடன் கூடிய பலகை அங்கு வைக்கப்பட்டுள்ளது. 

அது தவிர, அங்கு வசிக்கும் சிறார்களுக்கு விளையாட்டுப் பொருட்கள் விநியோகிப்பட்டுள்ளன. இவற்றை செய்தது, அரசோ அரசியல் கட்சியோ அல்ல. மென்பொருள் துறையச் சேர்ந்த தன்னார்வலர்கள். 

தங்களால் ஆன பணத்தை வைத்து மாதா மாத்ம் இயன்ற வரை நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள்.  தெருவிளக்கு அமைத்தது பற்றி அவர்கள் கூறுகையில் "கிராம எல்லையில் அமைக்கப்பட்டுள்ள விளக்கால் யானை உள்ளே நுழைவது தவிர்க்கப்படுகிறது. இதனால் மக்கள் பாதுகாப்பாக உணர்கிறார்கள்" என்கிறார்கள்.
  
அடுத்தவர்களை சந்தோஷப்படுத்தி பார்ப்பது தானே உண்மையான சந்தோஷம்? மற்றவர்களுக்கு, இயன்ற உதவிகளைச் செய்து சந்தோஷப்படுத்தும் இந்த ஊர், பெயர் அறியாத நண்பர்களை நாமும் வாழ்த்துவோம்!  வாழ்த்துக்கள்!!! 

4 கருத்து:

நானும் வாழ்த்துகிறேன் மகேஷ்...

வருகைக்கு நன்றி ஜுர்கேன் க்ருகேர்....

வாங்க தமிழ்ப்பறவை அண்ணே!

நல்ல் முயற்சி அல்லவா இது?

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More