தேர்தல் களேபரங்கள் ஆரம்பித்துவிட்டதல்லவா? இனி அரசியல் கட்சிகள் அடிக்கும் காமெடிக்கு அளவே இருக்காது. ஒவ்வொருவரும் அவரவர் திறமைக்கு ஏற்ப காமெடி செய்வார்கள். அவற்றில் போன வாரம் நடந்தவற்றில் சில!
* சுப்ரீம் ஸ்டார் : தேர்தலைப் புறக்கணிக்கத் தான் நினைத்தோம்.
(எப்பங்க? கூட்டணிக்கு ஆள் சிக்குவதற்கு முன்னேயா? )
* சந்திரபாபு நாயுடு : தீப்பெட்டி, சிகரெட் விலை ஏறிவிட்டதால் என் தம்பிகள் சிகெரெட் குடிக்க முடிவதில்லை!
(இத சொல்லியா ஓட்டு கேக்க போறீங்க ?)
* விஜய டி. ஆர் : எங்கள் கட்சி சார்பாக தேர்தலில் போட்டியிடுவோர் பட்டியலை தயார் செய்துகொண்டிருக்கிறோம்.
(உங்க ஒரு ஆளுக்கு பட்டியல் எல்லாம் எதுக்கு சார்?)
* நவரச நாயகன் : நான் விருதுநகரில் நிற்கிறேன்
(ஏனுங்க உங்க வீட்லயே நிக்கலாம்ல? எதுக்கு அங்க போறீங்க? ஓ! தேர்தல்லயா ? அப்ப சரி! )
தமிழ்க்குடிதாங்கி : பண பலத்தால் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்று நினைக்கிறார்கள். கண்டெய்னர், கண்டெய்னராக பணத்தை கொண்டு வந்தாலும், விமானத்திலேயே பணத்தை கொண்டு வந்து கொட்டினாலும் தி.மு.க. அணி வெற்றி பெற முடியாது.
(ஐயையோ... அப்படியா? அப்ப ஐந்து வருடம் கழித்து என்ன செய்யப் போகிறீர்கள்? )
பொன்முடி : 85 வயதான காலத்திலும், சக்கர நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு ஈழத் தமிழருக்காக குரல் கொடுத்து வருபவர் கருணாநிதி.
(உம்மோடு ஒரே நகைச்சுவையாய் இருக்கிறது போங்கள்)
* தங்கத்தாரகை : எந்தவித பயனுமின்றி வரி ஏய்ப்பு செய்வதற்காக வெளிநாடுகளில் ரகசியமாக பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியாவுக்குச் சொந்தமானப் பணத்தை பறிமுதல் செய்ய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
(சாமியோவ், நம்மோடதெல்லம் பத்திரமா இருக்குங்களா?)
* கலைஞர் : உடன்பிறப்பே...
(ஐயா, இருங்க கொஞ்சம் சிரிச்சுக்கறேன். இப்பெல்லாம் நீங்க இப்படி ஆரம்பித்தாலே சிப்பு வந்துடுது சிப்பு! )
இவை என் காதில் விழுந்தவை மட்டும் தான். இவற்றை விட பெரிய நகைச்சுவைகள் பல நடந்திருக்கலாம். அவற்றை பின்னூட்டுங்களேன்!
2 கருத்து:
கலக்கிட்டீங்க...
கமெண்ட்ஸ் எல்லாம் சூப்பர்.
வாங்க இராகவன் அண்ணே!
வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி
Post a Comment