February 20, 2009

நடிகர் விஜய்யிடம் வில்லு படம் பற்றி நான் கேட்க விரும்பும் 10 கேள்விகள்

10) காமெடி பண்றேன் பேர்வழினு கோவை தமிழை கொலை பண்றீங்களே அத எப்போ நிறுத்துவீங்க?

9) இந்த படத்துலயும் ஓபனிங் சாங் மத்த படங்கள் மாதிரியே இருக்கே, அது எப்படிங்க முடியுது?

8) ஒரு வில்லன Water Scooter ல கடத்திட்டு வருவீங்க. ஒரு Dive அடிச்சு Boat கீழ போவீங்க. வெளிய வந்ததும் Water Scooter மட்டும் அங்கேயே நிக்கும். ஆனா தொரத்திட்டு வந்தவங்க அப்படியே விட்டுட்டு போய்டுவாங்க. அது ஏனுங்க?

7) நடுகடல்ல நின்னுட்டு நீந்திக்கிட்டு இருப்பீங்க. வில்லன அடிக்கறதுக்கு எதையோ எடுக்குற மாதிரி காட்டுவாங்க. ஆனா அது கடல் அடியில கிடக்கும். எப்படிங்க எடுத்தீங்க? உங்களுக்கு அவ்ளோ பெரிய கையா?

6) சோளக்கொல்லை பொம்மை மாதிரி Intro Scene வச்சா நல்லா இருக்கும் அப்படின்னு கப்பித்தனமான ஐடியா யார் கொடுத்தா?

5) மானாட மயிலாடிக்கொண்டு இருந்த பழம்பெரும் நடிகை குஷ்புவை படத்துல ஆட வச்சு கூட எங்கள கடுப்படிக்கலாம்னு எப்படி தோனுச்சு?

4) எல்லா சண்டைகாட்சிகளிலும் சட்டை காலரை கடிச்சுகிறீங்களே அது ஏனுங்க?

3) மீசைய கொஞ்சமா முறுக்கி விட்டா அப்பா விஜய் ஆய்ட்றீங்க. ஆனா யாருக்கும் உங்கள அடையாளம் தெரியறது இல்ல. உங்க அம்மா ரஞ்சிதாவ பார்த்த உடனே நீங்க யாருன்னு கண்டுபுடிசுட்றாங்க. அது எப்படிங்க?

2) லொள்ளு சபா, பதிவுலகம் இப்படி எல்லா இடத்துலயும் உங்கள கலாய்க்கறாங்களே. ஆனா அதுக்கெல்லாம் கவலையே படாம அதே மாதிரி படம் நடிக்கிறீங்களே இதுக்கெல்லாம் உங்க அப்பா உசுப்பேத்தி விடறது தான் காரணமா?

1) Ok. Jokes Apart. எப்ப "படம்" நடிக்க போறீங்க?

1 கருத்து:

magesh ungalidam just ore oru question..........
"Ungaluku vera velaye ilaya?"

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More