December 17, 2010

புகைப்படம் - 18-12-2010

மாமல்லபுரம்





 திவ்யா
 தோட்டத்தில்.

December 07, 2010

புகைப்படம் - 08-12-2010

உங்கள் விமர்சனங்களைக் குத்துங்க எசமான் குத்துங்க...







நன்றி!
*

November 19, 2010

புகைப்படம் - 19-11-2010

வீட்டு மாடியில்.


*

November 13, 2010

புகைப்படம் - 14-11-2010

குழந்தைகள் தினமாம்!!!!
வருங்கால இந்தியாவுக்கு, பாதுகாப்பான எதிர்காலமும் முறையான கல்வியும் கிடைக்கட்டும்.












*

October 18, 2010

புகைப்படம் - 19-10-2010


எங்கள் வயலில் எடுத்தப் புகைப்படங்கள். 









*

October 14, 2010

காமன்வெல்த் விளையாட்டு 2010 - பூங்கொத்துகளும் ஒரு சவுக்கடியும்!

பத்தொன்பதாவது காமன்வெல்த் போட்டிகள் மிகக் கோலாகலமாக நடந்து முடிந்திருக்கின்றன. மிக மோசமான நிகழ்வுகளுடன் ஆரம்பித்த இந்த விளையாட்டுத் திருவிழா நல்லவிதமாக நடந்து முடிந்திருப்பது நிறைவைத் தருகிறது. விருந்தோம்பலுக்குப் பெயர் போன நாடு இந்தியா எனபதுடன், ஊழல், அலட்சியம் மலிந்த தேசம் என்பதையும் இன்னும் ஒரு முறை உலகுக்குச் சொல்லிப் பெருமைப் பட்டுக்கொண்டோம். பிற்பாடு மிகப் பிரம்மாண்டமாக ஆரம்பித்த போட்டிகள் முன்பு நடந்திருந்த நிகழ்வுகளை மறக்கடித்தன. தடைகளை மீறி சாதனை படைக்கும் நாடு இந்தியா என்ற குரல் உலக அரங்கில் ஓங்கி ஒலித்தது. வெற்றியின் பின்னாலிருக்கும் ஒவ்வொருவருக்கும் நன்றிகள். 

அடுத்தது விளையாட்டு வீரர்கள். 100 பதக்கங்கள் என்ற லட்சியத்துடன் களமிறங்கிய வீரர்கள் சொன்னதை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள். இறுதிப் போட்டியில் இந்திய ஹாக்கி அணியின் படு தோல்வி தனிப்பட்ட முறையில் வருத்தத்தைத் தந்தாலும், மொத்தப் பதக்கப் பட்டியலின் (38 தங்கம், 27 வெள்ளி மற்றும் 36 வெண்கலத்துடன் மொத்தம் 101 பதக்கங்கள்) முன்னால் பெரிதாகத் தெரியவில்லை. Again, விளையாட்டு வீரர்களுக்குத் தேவை ஒழுங்கான அங்கீகாரமும் நல்ல சூழலும். பதக்கம் வாங்கியவுடன் பாராட்டிவிட்டு மீண்டும் அடுத்தப் போட்டிக்கு வீரர்களைத் தேடுவது இனியாவது நடக்காமலிருக்கும் என நம்புவோம். வீரர்களுக்குப் பாராட்டுக்கள். மூன்றாவது இடத்திலிருந்த இந்தியாவை, தங்கம் ஒன்றை வென்று இரண்டாம் இடத்துக்கு ஏற்றி விட்ட சாய்னாவுக்கு கொஞ்சம் ஸ்பெஷலாக!!!!!! :) 

சவுக்கடி வேறு யாருக்குமில்லை. தமிழர்களாகிய நமக்குத் தான். இனவெறிக்கு எதிராக தீயாக வேலை செய்யும் இந்திய அரசு ராஜபக்சேவை மட்டும் கௌரவிப்பது என்னைப் பொறுத்தவரை மேலும் ஒரு சவுக்கடி!

*

October 10, 2010

கிராஸ் ப்ராஸஸிங்க் - ஃபோட்டோஷாப்.

ஃபோட்டோகிராஃபியில் கிராஸ் ப்ராஸஸிங் என்றொரு டெக்னிக் இருக்கிறது. ஒவ்வொரு ஃபிலிமுக்கும் ஒவ்வொரு கெமிக்கலை வைத்துப் ப்ராஸஸ் செய்வார்களாம். அவ்வாறில்லாமல் ஒரு ஃபிலிமுக்கு வேறு விதமான கெமிக்கலை பயன்படுத்திப் ப்ராஸஸ் செய்யும் போது வித்தியாசமான எஃபெக்ட் கிடைக்கிறது. 

தற்செயலாகக் கண்டறியப்பட்ட இந்த எஃபெக்ட் இன்று நிறைய தீம்களில் பயன்படுத்தப்படுகிறது. ஃபிலிம் ஃபோட்டோக்கள் சரி.. டிஜிட்டலில் எப்படி இந்த எஃபெக்டைப் பெறுவது? இருக்கவே இருக்கிறது வளைவுகள்.. அதாவது Curves!!!!!

1) படத்தை PS ல் திறவுங்கள்

2) Layer > New Adjustment Layer > Curves மூலம் ஒரு adjustment Layer ஐத் திறக்கவும்.

3) இனி சிவப்பு, பச்சை மற்றும் நீல நிறங்களின் Curves ஐ பின்வருமாறு மாற்றுங்கள். இப்போதே ஒரு மாதிரி வண்ணங்கள் மாறி இருக்கும்.


மூன்று வண்ணங்களையும் மாற்றிய பின் இவ்வாறு இருக்கும்.




4) இனி ரசனைக்கேற்றவாறு ஷார்ப்னெஸ், காண்ட்ராஸ்ட் மாற்றிக் கொள்ளவும்

5) கடைசியாக ஒரு மஞ்சள் நிற Fill Layer ஐத் திறக்கவும் Layer > New Fill Layer > Solid Color. நிறம் eaff00. இந்த லேயரின் ப்லெண்ட் மோடை Color க்கு மாற்றவும். Opacity ஐ பத்துக்கும் குறைவாக வைக்கவும்.

6) லேயர்களை ஒன்றாக்கி சேமித்துக் கொள்ளுங்கள். Tats it!


*

October 09, 2010

ச்சும்மா...


*

October 01, 2010

எந்திரன் மேனியா

முதலில் அமரர் சுஜாதா அவர்களைப் பற்றி... கதையின் அடிநாதம் அவரின் என் இனிய இயந்திராவை ஒட்டியே இருக்கிறது. 
”செயற்கை அறிவுடன் கூடிய இயந்திரன், மனிதன் போல் சிந்திக்க ஆரம்பித்தால்?” என்ற கேள்வியை வைத்து அவர் எழுதிய கதை என்று பிரம்மாண்டமாக, எந்திரனாக வளர்ந்திருக்கிறது. அஞ்சலிகள்!!! அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. 

இனி படம்... 

இந்திய ராணுவத்துக்கு அர்ப்பணிப்பதற்காக ஒரு மனித ரோபோவை (சிட்டி - ரஜினி)உருவாக்குகிறார் டாக்டர் வசீகரன் (ரஜினி). அந்த ரோபோவுக்கு மனித உணர்வுகள் கற்பிக்கப்படுகின்றன. பிறகு சிட்டி, டாக்டரின் காதலி சனா (ஐஸ்) மீது காதல் கொள்கிறது. இடையில் வில்லன்(டேனி), சிட்டியை தீய நோக்கத்துக்குப் பயன்படுத்த நினைக்கிறார். அதன் பிறகு நடக்கும் விறு விறு சுறு சுறு ரேஸ் தான் எந்திரன்.

ரஜினியைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். தனது மாஸைப் பற்றிக் கவலைப்படாமல், வழக்கமான எண்ட்ரி இல்லாமல், குத்து வசனங்கள் இல்லாமல் நடித்திருக்கிறார். மற்ற So called super stars கவனிக்க வேண்டிய விஷயம் இது. மிரட்டல் தலைவா!!!!

ஐஸுக்கு வயசானது ராவணனிலேயே கன்ஃபார்ம் ஆகிவிட்டது. ஆனால் இந்தப் படத்தில் ரஜினியுடன் இருக்கும் போதெல்லாம் இளமையாகத் தெரிகிறார். டான்ஸ் அசத்தல். 

இயக்குனர் ஷங்கர் ஒரு அறிவியல் கதையை முடிந்த அளவுக்கு கமர்சியலாக்கித் தந்திருக்கிறார். வெற்றியும் பெறுகிறார். எங்கேயும் யோசிக்கவிடாத திரைக்கதை கடும் உழைப்பைக் காட்டுகிறது. கடைசி 45 நிமிடங்கள் பிரம்மிக்க வைக்கின்றன. அவரிடமிருந்து இந்த மாதிரியான பிரம்மாண்டங்களைத் தான் எதிர்பார்க்கிறோம். ரோட்டுக்குப் பெயிண்ட் அடித்து ரண்டக்க ரண்டக்க என்று பாடுவதையல்ல... :) 

சில இடங்களைத் தவிர்த்து கிராஃபிக்ஸ் நேர்த்தியாக இருக்கிறது. கலை, இசை, சண்டைப் பயிற்சி எல்லாம் செம செம... இரண்டாம் பாதியில் வரும் சில ரொமான்ஸ் காட்சிகளை மட்டும் வெட்டியெறிந்திருக்கலாம். பாடல்கள் பார்க்க நன்றாக இருந்தாலும் வேகத்தைக் குறைக்கின்றன. 

மொத்தத்தில் இந்திய நிறத்தில் ஒரு ஹாலிவுட் சினிமா... 

டிஸ்கி 1 : இந்தி மீடியாக்கள் படத்தைக் கொண்டாடுகின்றன. எப்பேர்ப்பட்ட படத்துக்கும் மூன்று ஸ்டார்கள் கூட கொடுக்க அழும் விமர்சகர்கள், எந்திரனுக்கு நான்கு நான்கரை என்று தந்திருக்கிறார்கள்.

டிஸ்கி 2 : இந்த மாதிரி முயற்சிகள் வெற்றி பெறாவிட்டால், கிராமத்திலிருந்து நகரத்துக்கு வந்து ரௌடிகளை அழிக்கும் சூப்பர் ஹீரோக்களை மட்டுமே பார்க்க வேண்டியிருக்கும் என்பது எனது கருத்து. :)

டிஸ்கி 3 : ஷாருக் படத்தைப் பார்த்துக் கண்டிப்பாக வருந்தியிருப்பார். 

*

September 29, 2010

முகங்கள்

”மச்சி, போர்ட்ராய்ட் உனக்கு நல்லா வருது” என்றான் நண்பன்.. மற்ற படங்கள் எல்லாம் சகிக்கவில்லை போல.... 


அதனால் இந்த பதிவில் நான் எடுத்ததில் எனக்குப் பிடித்த முகங்கள்... 


1) திவ்யாக்குட்டி.. 

2) திவ்யா அம்மாவுடன்.

3) நண்பன் விமல்


4) சித்தார்த் (எ) வசந்த்.


5) மாடல்(!) வெங்கி...


6) கடைசியாக எனக்குப் பிடித்த கருப்பு வெள்ளையில், மாமல்லபுரத்திலிருந்து ஒரு ஆயா...


வழக்கம்போல் உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More