Showing posts with label நகரம். Show all posts
Showing posts with label நகரம். Show all posts

April 18, 2009

உடன்பிறப்பே...

தேர்தல் களேபரங்கள் ஆரம்பித்துவிட்டதல்லவா? இனி அரசியல் கட்சிகள் அடிக்கும் காமெடிக்கு அளவே இருக்காது. ஒவ்வொருவரும் அவரவர் திறமைக்கு ஏற்ப காமெடி செய்வார்கள். அவற்றில் போன வாரம் நடந்தவற்றில் சில! 

* சுப்ரீம் ஸ்டார் : தேர்தலைப் புறக்கணிக்கத் தான் நினைத்தோம்.
(எப்பங்க? கூட்டணிக்கு ஆள் சிக்குவதற்கு முன்னேயா? ) 

* சந்திரபாபு நாயுடு : தீப்பெட்டி, சிகரெட் விலை ஏறிவிட்டதால் என் தம்பிகள் சிகெரெட் குடிக்க முடிவதில்லை!
(இத சொல்லியா ஓட்டு கேக்க போறீங்க ?)

* விஜய டி. ஆர் : எங்கள் கட்சி சார்பாக தேர்தலில் போட்டியிடுவோர் பட்டியலை தயார் செய்துகொண்டிருக்கிறோம்.
(உங்க ஒரு ஆளுக்கு பட்டியல் எல்லாம் எதுக்கு சார்?)

* நவரச நாயகன் :  நான் விருதுநகரில் நிற்கிறேன்
(ஏனுங்க உங்க வீட்லயே நிக்கலாம்ல? எதுக்கு அங்க போறீங்க? ஓ! தேர்தல்லயா ? அப்ப சரி! )

தமிழ்க்குடிதாங்கி : பண பலத்தால் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்று நினைக்கிறார்கள். கண்டெய்னர், கண்டெய்னராக பணத்தை கொண்டு வந்தாலும், விமானத்திலேயே பணத்தை கொண்டு வந்து கொட்டினாலும் தி.மு.க. அணி வெற்றி பெற முடியாது.
(ஐயையோ... அப்படியா? அப்ப ஐந்து வருடம் கழித்து என்ன செய்யப் போகிறீர்கள்? )

பொன்முடி :   85 வயதான காலத்திலும், சக்கர நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு ஈழத் தமிழருக்காக குரல் கொடுத்து வருபவர் கருணாநிதி.
(உம்மோடு ஒரே நகைச்சுவையாய் இருக்கிறது போங்கள்)

* தங்கத்தாரகை : எந்தவித பயனுமின்றி வரி ஏய்ப்பு செய்வதற்காக வெளிநாடுகளில் ரகசியமாக பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியாவுக்குச் சொந்தமானப் பணத்தை பறிமுதல் செய்ய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
(சாமியோவ், நம்மோடதெல்லம் பத்திரமா இருக்குங்களா?)

* கலைஞர் :  உடன்பிறப்பே... 
(ஐயா, இருங்க கொஞ்சம் சிரிச்சுக்கறேன். இப்பெல்லாம் நீங்க இப்படி ஆரம்பித்தாலே சிப்பு வந்துடுது சிப்பு! )

இவை என் காதில் விழுந்தவை மட்டும் தான். இவற்றை விட பெரிய நகைச்சுவைகள் பல நடந்திருக்கலாம். அவற்றை பின்னூட்டுங்களேன்! 

March 04, 2009

அல்டாப்பு பஸ் ஸ்டாப்.

சென்னை மாநகர் போக்குவரத்து கழகம், கண்ணகி சிலை பேருந்து நிறுத்தத்தில் ஒரு அழகான நிழற்கூடத்தைக் கட்டி உள்ளது. GPS முறையில் பேருந்துகளின் இருப்பிடம் அறியும் வசதி, சில்லறை மாற்றும் இயந்திரம், ISD வசதியுடன் கூடிய பொது தொலைபேசி, செல்பேசி சார்ஜ் செய்யும் வசதி, மின்விளக்குகள், இரண்டு மின்விசிறிகள், தூரத்தில் வரும் பேருந்துகளை பார்க்க Concave கண்ணாடி (குவி ஆடி தானே ?), கடிகாரம், வசதியான இருக்கைகள், வெப்பநிலை அறியும் வசதி மற்றும் இவற்றை எல்லாம் பாதுகாக்க காவலாளி என்று நிழற்கூடம் அமர்க்களப்படுகிறது. இதுபோல இன்னும் 500 பேருந்து நிறுத்தங்கள் கட்டப்படும் என்று சொல்கிறார்கள். நல்ல செய்தி.
இவை எல்லாம் கண்டிப்பாக பயணிகளுக்கு பயன் தரும் என்பதில் சந்தேகம் இல்லை. ஒழுங்காக பராமரிக்க படவேண்டும், அவ்வளவு தான். முக்கியமாக மழை காலங்களில். சாதரணமாகவே அந்த இடத்தில் மழை பெய்தால் நிழற்கூடத்திற்கு பின்னால் இறக்கும் மைதானம் வரை சாரல் அடிக்கும். இப்போது இந்த இயந்திரங்கள் மேல் கண்டிப்பாக சாரல் விழும். காப்பாற்ற என்ன செய்ய போகிறார்களோ! இவ்வளவு செய்தவர்கள் இதைப் பற்றி யோசித்து இருப்பார்கள் என்று நம்புவோம்.
நண்பர் ஒருவர் இயந்திரத்தில் சில்லறை மாற்ற ஓரிரு முறை முயன்றிருக்கிறார். "No Stock" என்றே பதில் வந்ததாம்! இதெல்லாம் சரி செய்தால் மகிழ்ச்சி.
எப்படியோ... ஒரு நல்ல முயற்சியை நாமும் வாழ்த்துவோம்!!!

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More