February 20, 2009

நடிகர் விஜய்யிடம் வில்லு படம் பற்றி நான் கேட்க விரும்பும் 10 கேள்விகள்

10) காமெடி பண்றேன் பேர்வழினு கோவை தமிழை கொலை பண்றீங்களே அத எப்போ நிறுத்துவீங்க?

9) இந்த படத்துலயும் ஓபனிங் சாங் மத்த படங்கள் மாதிரியே இருக்கே, அது எப்படிங்க முடியுது?

8) ஒரு வில்லன Water Scooter ல கடத்திட்டு வருவீங்க. ஒரு Dive அடிச்சு Boat கீழ போவீங்க. வெளிய வந்ததும் Water Scooter மட்டும் அங்கேயே நிக்கும். ஆனா தொரத்திட்டு வந்தவங்க அப்படியே விட்டுட்டு போய்டுவாங்க. அது ஏனுங்க?

7) நடுகடல்ல நின்னுட்டு நீந்திக்கிட்டு இருப்பீங்க. வில்லன அடிக்கறதுக்கு எதையோ எடுக்குற மாதிரி காட்டுவாங்க. ஆனா அது கடல் அடியில கிடக்கும். எப்படிங்க எடுத்தீங்க? உங்களுக்கு அவ்ளோ பெரிய கையா?

6) சோளக்கொல்லை பொம்மை மாதிரி Intro Scene வச்சா நல்லா இருக்கும் அப்படின்னு கப்பித்தனமான ஐடியா யார் கொடுத்தா?

5) மானாட மயிலாடிக்கொண்டு இருந்த பழம்பெரும் நடிகை குஷ்புவை படத்துல ஆட வச்சு கூட எங்கள கடுப்படிக்கலாம்னு எப்படி தோனுச்சு?

4) எல்லா சண்டைகாட்சிகளிலும் சட்டை காலரை கடிச்சுகிறீங்களே அது ஏனுங்க?

3) மீசைய கொஞ்சமா முறுக்கி விட்டா அப்பா விஜய் ஆய்ட்றீங்க. ஆனா யாருக்கும் உங்கள அடையாளம் தெரியறது இல்ல. உங்க அம்மா ரஞ்சிதாவ பார்த்த உடனே நீங்க யாருன்னு கண்டுபுடிசுட்றாங்க. அது எப்படிங்க?

2) லொள்ளு சபா, பதிவுலகம் இப்படி எல்லா இடத்துலயும் உங்கள கலாய்க்கறாங்களே. ஆனா அதுக்கெல்லாம் கவலையே படாம அதே மாதிரி படம் நடிக்கிறீங்களே இதுக்கெல்லாம் உங்க அப்பா உசுப்பேத்தி விடறது தான் காரணமா?

1) Ok. Jokes Apart. எப்ப "படம்" நடிக்க போறீங்க?

February 13, 2009

"தல" & "தளபதி".... தாங்க முடியலடா சாமி.

ஒன்னும் சொல்றதுக்கு இல்ல.

நீங்க மட்டும் தானா? நாங்களும் செய்வோம்ல!

செம்ம காமெடி சார் நீங்க!!!

January 25, 2009

என்னை தெரியுமா?


50 First Dates படம் பார்த்து இருக்கிறீர்களா ? குல்பி பிகர் Drew Barrymore நடித்த படம். ஒரு கார் விபத்தில் அம்னீஷியாவால் பாதிக்கப்படுவார். ஒவ்வொரு நாள் காலையில் எழுந்ததும் முதல் நாள் நடந்தது மறந்து விடும். அதே கதை. Barrymore க்கு பதில் நாயகன் மனோஜ். (தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் கலை வாரிசு). க்ரைம், த்ரில்லர் எல்லாம் சேர்த்து குருமா வைக்க முயற்சித்து இருக்கிறார்கள். மனோஜ் கன்னம் குழி விழ சிரிக்கிறார். படம் முழுக்க புஜ பலம் காட்டுகிறார். நாயகனின் சித்தப்பாவாக வரும் நாசர் பொசுக் என்று செத்து போகிறார். கொலைப்பழி நாயகன் மீதே விழுகிறது. யார் கொலை செய்தார்கள் என்பதே மீதிக் கதை. யார் செய்தார்கள் என தெரியும் போது சுவாரஸ்யமாக தான் இருக்கிறது. நாயகிகளாக சினேகா உல்லல் மற்றும் ரியாசென். சினேகா உல்லல் ஐஸ்வர்யா ராய் ஐ ரீ-மிக்ஸ் செய்த மாதிரி இருக்கிறார். வழக்கை விசாரிக்கும் IPS அதிகாரி அவர். விசாரணைக்கு மனோஜ் ஐ கூடவே கூட்டி கொண்டு அலைகிறார். காமெடிக்கு பிரமானந்தம் மற்றும் சுனில். அவர்களை விட மனோஜ் மேல். ஒரு சண்டை காட்சியில் ஆதி விஜய் ஐ கலாய்க்கும் போது தியேட்டரே சிரிப்பால் அதிர்கிறது. பாடல்கள் நன்றாகவே இருக்கின்றன. தண்ணி கருத்திருச்சு ரீ-மிக்ஸ் ஆட வைக்கிறது. ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது. படத்தில் இன்னொரு நல்ல விஷயம் Dressings. குறைவாக இருப்பதால் சொல்லவில்லை, அழகாக இருக்கிறது. ஆனால் படத்தில் எதோ ஒன்று குறைகிற மாதிரியே இருக்கிறது. காட்சிகள் பல ஒன்றுக்கு ஒன்று தொடர்பே இல்லாமல் தொங்குகின்றன. திரைக்கதையை இன்னும் மெருகேற்றி இருக்கலாம். மொத்தத்தில் சுமார் ரகம் . அதுவே வேறு எதுவும் டிக்கெட் கிடைக்காமல் டைம் பாஸ் செய்தே ஆக வேண்டும் என்று இந்த படத்துக்கு போனால் "நல்லா தான் இருக்கு" என்று மனசை தேற்றிக்கொள்ளலாம்.

August 26, 2008

ஏற்காடு பயணம்

வெள்ளி, சனி, ஞாயிறு என தொடர்ந்து மூன்று நாள் விடுமுறை கிடைத்ததும் மூட்டை முடிச்சுகளுடன் கிளம்பினோம் ஏற்காட்டிற்கு. பேருந்து மற்றும் விடுதி அறைகளுக்கு முன்பதிவு செய்துவிட்டிருந்தோம். மூன்று நாள் ஏற்காட்டில் என்ன செய்ய போகிறோம் என்ற கவலை Clifton Inn புண்ணியத்தில் தீர்ந்தது (பாதி நேரம் அறையில் தண்ணீர் வராமல் அடைந்து கிடந்தால் எப்படி வெளியே போவதாம்? ).
அறைக்குப் போய்ச் சேர்ந்ததே வெள்ளி மதியம் தான். குளித்து சாப்பிட்டு விட்டு Sight seeing கிளம்பினோம். முதலில் சென்றது சேர்வராயன் கோயில்.
கடல் மட்டத்தில் இருந்து சுமார் 5300அடி உயரத்தில் இருக்கும் இந்த இடம் தான் சேர்வராயன் குன்றுகளிலே உயரமான இடம். இங்கு இருப்பது குகை கோயில். இந்த குகை கர்நாடகாவில் இருக்கும் தலைக்காவிரி வரை செல்வதாக சொல்கிறார்கள். இந்த மலையைச் சுற்றி இருக்கும் சுமார் 50 மலைக் கிராமங்களுக்கு இது தான் காவல் தெய்வம். ஆண்டு தோறும் மே மாதம் இங்கு விழா நடைபெறுகிறது.

தரிசனம் முடிந்து அங்கிருக்கும் View Point வந்தால் ஒரே பனி மூட்டம். இங்கிருந்து பார்த்தால் மேட்டூர் அணை தெரியும் என்றார்கள். பார்க்க முடியவில்லை. அருகில் ஓர் பெரிய சமவெளி. வாகனங்களில் பாடலை ஒலிக்க விட்டு பலர் ஆடிக்கொண்டிருந்தனர்.

கீழே வரும் வழியில் ராஜராஜேஸ்வரி கோயில் உள்ளது. மிகச்சிறிய ஆனால் மிக அழகான கோயில். அம்மன் சிலை ஒரே கல்லால் ஆனது. விஜயதசமி இங்கு விசேஷம்.

பின்பு நேரே பகோடா பாயிண்ட் போனோம். அங்கிருந்து அரூர்,கிருஷ்ணகிரி பகுதிகளைப் பார்க்கலாம். இங்கு பிரமிட் வடிவில் அடுக்கபட்டிருக்கும் கல்கள் பலவற்றை காணலாம். இதன் மூலம் தான் இதற்கு பகோடா பாயிண்ட் என்று பெயர் வந்தது என்று அங்கிருந்த ஒரு டீக்கடைகாரர் சொன்னார். அங்கே சிறிது நேரம் கழித்துவிட்டு அறைக்கு திரும்பினோம்.
அடுத்த நாள் தான் பிரச்சனையே. காலையில் சுமார் மூன்று மணி நேரம் தண்ணீர் வரவில்லை. Service ம் சரி இல்லை. இந்த Hotel வேண்டாம் என்று காலி செய்து விட்டு வேறு Hotel பார்த்து தங்கினோம். இதற்குள் பாதி நாள் ஓடி போனது. மதியமாகக் கிளம்பினோம் அருவிக்கு. சுமார் 2 கி.மீ வரை காரில் சென்று பின் ஒரு கி.மீ கீழிறங்க வேண்டும். மிகவும் சரிவான ஒற்றையடி பாதை. ஒரு புறம் தனியாருக்குச் சொந்தமான தோட்டத்தின் முள் வேலி. மறு புறம் மலைச் சரிவு. வழுக்கினால் பிடித்துக்கொள்ள கூட எதுவும் இல்லை. கைகளை ஊன்றி தான் இறங்க வேண்டும். ஒரு வழியாக இறங்கி அருவியைச் சென்றடைந்தோம். அருவியைக் கண்டதும் வந்த களைப்பெல்லாம் ஓடியே போனது. சுமார் 300 அடி உயரத்தில் இருந்து விழுகிறது இந்த அருவி. ஏற்காடு ஏரியின் உபரி நீர் இங்கு அருவியாக விழுந்து கிளியூர் கிராமத்தை அடைகிறது. பருவ மழைக்கு பிறகு சென்றால் அருவியில் நிறைய தண்ணீர் இருக்கும். ஒரு மணி நேர குளியலுக்கு பிறகு மேலேற ஆரம்பித்தோம். மேலே வருவது கீழிறங்குவதை விட சிரமமாக இருந்தது. கால்கள் இரண்டும் சரியான வலி. கஷ்டப்பட்டு மேலே வந்து சேர்ந்தோம்.
அறைக்கு சென்று சிறிது ஓய்வு எடுத்துக்கொண்டு ஏரிக்கு கிளம்பினோம். போய்ச் சேர்ந்த போது மணி 6 ஆகிவிட்டிருந்தது. படகு சவாரி செல்ல முடியவில்லை. ஏரியின் நடுவில் சிறு தீவும் அதனுள் ஒரு பூங்காவும் இருக்கின்றன. ஏரியின் அருகில் அண்ணா பூங்காவும், அதன் கரையில் மற்றொரு பூங்காவும் இருக்கின்றன. எல்லாம் பார்த்து விட்டு, இரவு உணவுக்கு வாங்க வேண்டியதெல்லாம்(!) வாங்கிக்கொண்டு அறைக்குச் சென்றடைந்தோம். 9 மணி வாக்கில் மழை ஆரம்பித்தது. Balcony யில் உட்கார்ந்து கொண்டு, இருளையும் மழையையும் ரசித்துக்கொண்டு வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.
மூன்றாம் நாள் காலையில் Ladies Seat, Gents Seat, Children's Seat. Rose Garden ஆகியவற்றிற்கு விசிட் அடித்தோம். இவை எல்லாம் அருமையான View Points. சேலம் நகரின் அழகையும், பனி மூடாமல் இருந்தால் காவிரி ஆற்றையும் ( Telescope ) பார்த்து ரசிக்கலாம். Rose Garden இல் சிறிது ஓய்வு எடுத்து விட்டு அறைக்கு திரும்பினோம். ஏற்காட்டைப் பிரிய மனம் இன்றி பிரியாவிடை கொடுத்துவிட்டு சேலம் கிளம்பினோம். வரும் வழியில் முதல் நாள் மழையில் முளைத்துவிட்டிருந்த பல திடீர் அருவிகள் கண்ணுக்கு விருந்தளித்தன. அடுத்த நாள் ஆரம்பிக்க போகும் இயந்திர வாழ்கையை எண்ணிக் கொண்டே, மூன்று நாள் அனுபவித்த சொர்க்கத்தை விட்டு கீழிறங்கினோம். :)

June 07, 2007

மென்பொருளாளன்

ஊர் உறங்கும் வேளையில்
கண் விழிக்கிறது என் பேனா.

தூக்கம் விற்று வாங்கிய தலையணை
அனலாய்த் தகிக்கிறது.

பணம் பண்ணும் வேகத்தில்
பாசம் செல்போனுடன் முடிந்து போகிறது.

வெளியூர் சுற்றுலா செல்கிறேன்
உள்ளூர் திருவிழாவை அடகு வைத்து.

நட்சத்திர ஹோட்டல் நீச்சல் குளத்தில் குளித்துக்கொண்டு
ஊரணி சுகத்திற்க்காக ஏங்கும்
நான் – ஒரு
மென்பொருளாளன்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More